♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥
உன் சின்னஞ்சிறு கண்களால் நீ எனக்களித்த
சின்னஞ்சிறிய காதலைக்கொண்டு
நான் எழுதி எழுதிப் பார்த்துக்கொண்டிருக்கும் கவிதைகளை...
நீ எங்காவது படிக்கும் போது...
இந்தக் கவிதைகளில் வருகின்ற பெண் நீதான் என்பதை,
நீ கடைசி வரை அறியாமல் போனால் கூட,
அதற்காக கொஞ்சமும் கவலை கொண்டு விடாது என் காதல்...
ஆனால்... அதற்கு மாறாக...
'இந்தக் கவிதைகளில் வருகின்ற பெண் நானாக இருக்கக் கூடாதா'
என்று மட்டும் நீ நினைத்து விட்டால்..
அதற்காகப் பெரும் கவலை கொண்டு
துடித்துப் போகும் என் காதல்....
ஏனென்றால்...என் கவிதைகளில் வருகின்ற உன்னை விட,
மிக மிக அற்புதமாய் நீ ஏதோ ஓர் இல்லத்தை
காதலால் ஆட்சி செய்து கொண்டிருப்பாய் என்று
நம்பிக்கொண்டிருக்கின்ற காதலைத்தான்
நீ எனக்கு வழங்கியிருக்கிறாய்........
♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥


0 பின்னூட்டங்கள்:
Post a Comment