♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥
மழையில் நனைந்த
குழந்தையினை
தன் முந்தானையால்
துடைத்து விடும்
ஒரு தாயை...
மழையில் நனைந்த படியே
பார்த்துக்கொண்டிருக்கும்
ஒரு தாயில்லாச்
சிறுமியைப் போல்....
கடற்கரையிலும்
பூங்காக்களிலும்
இணை இணையாய்
அமர்ந்திருக்கும்
காதலர்களைப் பார்த்தபடி
தன்னந்தனியே நிற்கிறது
உனக்கான
என் காதல்......
♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥


0 பின்னூட்டங்கள்:
Post a Comment