♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥
உன்னை முதன்முதலில்
இரவு உடையில் பார்த்த நாள்..
புதிய உடை அது...
ஆனாலும் நீதான் உடையை விடப்
புதிதாய் இருந்தாய்...
இரவின் ரம்மியத்திற்கும்
ராத்திரி ஈரக்காற்றுக்கும்
நண்பர்களின் அதிசயப் பார்வைக்கும்
நடுவே....
நீதான்....
நீதான் உலகமாக இருந்தாய்...
அந்த அதி அற்புதக் காற்சிதான்...
நான் கண்களை மூடினாலே
விஸ்வரூபம் எடுக்கிற காட்சி...இன்றும்...
♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥


0 பின்னூட்டங்கள்:
Post a Comment